NREGA Job Card : 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு - மத்திய அரசு அதிரடி முடிவு!

*NREGA Job Card : 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு - மத்திய அரசு அதிரடி முடிவு!*
நீங்களும் உங்கள் கிராம பஞ்சாயத்தில் பணிபுரிந்தால் அல்லது MNREGA இல் வேலை செய்ய விரும்பினால், இதற்கு NREGA வேலை அட்டை இருக்க வேண்டும். NREGA வேலை அட்டைக்கு விண்ணப்பிக்க, நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி என்பதை இங்கே காணலாம். மேலும், அந்த அட்டையின் நன்மைகள், தகுதி மற்றும் ஆவணங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் குடிமக்களுக்கு மத்திய அரசு வேலை அட்டையை வழங்குகிறது. இந்த அட்டையில், அவர்கள் செய்த அனைத்து வேலைகளின் விவரங்கள், எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள், கூலி போன்ற தகவல்கள் இருக்கும். தினசரி நிலையான கூலி கிடைப்பதோடு, ஊதியமும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். NREGA வேலை அட்டைக்கு விண்ணப்பிக்க, முந்தைய விண்ணப்பப் படிவத்தை கிராம பஞ்சாயத்து கிராமத் தலைவர் நிரப்ப வேண்டும். ஆனால் இப்போது NREGA வேலை அட்டை விண்ணப்ப செயல்முறை MNREGA துறையால் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. NREGA ஜாப் கார்டுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.
NREGA ஜாப் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓராண்டில் 100 நாட்கள் வேலை கிடைக்கும். இதனால் கிராமப்புற வேலையற்றோர் நிதி உதவி பெறுகின்றனர். இந்த கார்டு இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். வேலை அட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நாளின் வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ஜாப் கார்டு மூலம், பல அரசு திட்டங்களில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. NREGA வேலை அட்டையைப் பெற்ற பிறகு, வேலையில்லாத குடிமக்கள் வேலைக்காக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
NREGA வேலை அட்டைக்கு தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அடையாள அட்டை, முகவரிச் சான்று, சாதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம்.NREGA ஜாப் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? : நீங்கள் NREGA வேலை அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஆன்லைனில் விண்ணப்பிக்க இது மிகவும் எளிதானது. முதலில் நீங்கள் UMANG போர்டல் ( ) அல்லது UMANG ஆப் அல்லது NREGA அதிகாரப்பூர்வ இணையதளம் ( ) செல்ல வேண்டும் . எப்படியிருந்தாலும், நீங்கள் இறுதியாக அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்வீர்கள். முதலில் அங்கு பதிவு செய்து உள்நுழையவும். அதற்கு மொபைல் எண் அல்லது MPin அல்லது OTP மூலம் உள்நுழையவும். அடுத்து, நீங்கள் தேடல் அட்டவணையில் MGNREGA ஐ தேட வேண்டும். நீங்கள் அதை கிளிக் செய்தவுடன், மூன்று விருப்பங்கள் உங்கள் முன் தோன்றும்.இப்போது அந்த மூன்றில் Apply for Job Card ஆப்ஷனை கிளிக் செய்யவும். அப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். இப்போது நீங்கள் இந்தப் பக்கத்தில் பொதுவான விவரங்களை உள்ளிட வேண்டும். தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, மாநில பெயர், தொகுதி, பஞ்சாயத்து, ஜாதி தேர்வு, குடும்ப தலைவரின் பெயர், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். பின்னர் அடுத்த விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது மற்றொரு பக்கம் திறக்கும். அதில் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், வயது, செல்போன் எண் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும், வேலை அட்டைக்கு விண்ணப்பிக்கவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடன், பதிவு எண் அல்லது ரசீது தோன்றும். அதை வைத்துக் கொள்ளுங்கள். வேலை அட்டையை உருவாக்கிய பிறகு, நீங்கள் NREGA வேலை அட்டை எண்ணைப் பெறுவீர்கள். அதன் பிறகு அந்த அட்டையை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையெல்லாம் இ-சேவை மையங்களிலும் செய்யலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

குடியிருப்பு விசா காலம் காலாவதியாகி உள்ளவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியே ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமீரக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான மத்திய ஆணையம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

விசா காலாவதியான பின்னரும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்படுவதுடன், செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விசா விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகை எதுவும் இல்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியும்.

கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

 கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?



🤔அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தன சோப்பு 🤎🤎🤎 பயன்படுத்துவது தான். சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
தினமும் போட்டு குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கிறது
சிவப்பு சந்தனத்தின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் ஆனது, சொரியாசிஸ், பதனிடப்பட்ட தோல், எண்ணெய் சருமம், ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, பருக்கள் மற்றும் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிப்பது, போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தோல் பிரச்சினைகளுக்கும் இது ஒரு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.
1 *ஆரோக்கியமான சருமம்*
உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தன சோப்பு சிறப்பாக செய்யும்
2 *பொலிவான முகம்*
உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத சோப்பு பயன்படுத்துங்கள்.
3 *தழும்புகள் மறையும்*
பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தன சோப்பு கொண்டு எளிதில் போக்கலாம்.
4 *இறந்த செல்கள்* *நீங்கும்*
சிவப்பு சந்தன சோப்பு சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.
5 *அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்*
சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் இந்த சோப்பு பயன் படுத்தி தீர்வு காணலாம்
6 *சரும கருமை நீங்கும்*
வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தன சோப்பு உதவும்.
7 *பிம்பிள் நீங்கும்*
சிலர் பிம்பிள் அல்லது முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தன சோப்பு பயன்படுத்தி பருக்களை அடித்து விரட்டலாம் 8 *முதுமை தோற்றம் தடுக்கப்படும்*
சிலருக்கு இளமையிலேயே சரும ஒருவித சுருக்கத்துடன் காணப்படும். இதனைத் தடுக்க சிவப்பு சந்தன சோப்பு உதவும்
**உங்களின் தேவைக்கு எங்களை அழையுங்கள்*
*இயற்கை வழலை திருச்சி**
*9344352510*

ஏசியை 26+ டிகிரியில் வைத்து ஃபேன் போடுங்கள்

 ஏசியை 26+ டிகிரியில் வைத்து ஃபேன் போடுங்கள்



மின் வாியத்திலிருந்து ஒரு நிர்வாக பொறியாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்:-
ஏசியின் சரியான பயன்பாடு.
கோடை வெயில் தொடங்கிவிட்டதால் AC ஐ அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையைப் பின்பற்றுவோம்.
பெரும்பாலான மக்கள் தங்கள் ஏசிகளை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல் குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது.
அதாவது,
நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும்.
23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை உடல் எளிதில் பொறுத்துக்கொள்ளும். இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, ​​உடல் தும்மல், நடுக்கம் போன்ற வற்றினை எதிர்த்து போராட வேண்டும்.
நீங்கள் 19-20-21 டிகிரியில் ஏசியை இயக்கும்போது, ​​அறையின் வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும். மேலும் இது உடலில் ஹைப்போதெர்மியா எனப்படும் நோய் உருவாகிறது, இது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதனால் உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் போதுமானது இல்லை. . மூட்டுவலி போன்ற நீண்ட கால தீராத வலிகள் உருவாகின்றன.
பெரும்பாலும் ஏசி ஆன் செய்யும்போது வியர்வை வராது, அதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வர முடியாமல், நாளடைவில் தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
நீங்கள் குறைந்த வெப்பநிலையில் ஏசியை இயக்கும்போது, ​​5 ஸ்டார் AC ஆக இருந்தாலும், அதன் கம்ப்ரசர் முழு ஆற்றலில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகப்படியான மின்சாரம் செலவழிக்கப்படுகிறது மற்றும் அது உங்கள் பணத்தை விரயமாக்கிறது.
முதலில் ஏசியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்பதை மனதளவில் நீங்கள் ஒத்துக்கொள்ள வெண்டும்.
அப்படியானால்
ஏசியை இயக்க சிறந்த வழி எது ??
26 டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை அமைக்கவும்.
26+ டிகிரியில் ஏசியை இயக்குவதும், மெதுவான வேகத்தில் மின்விசிறியைப் போடுவதும் எப்போதும் நல்லது. 28 பிளஸ் டிகிரி சிறந்தது.
இதற்கு மின்சாரம் குறைவாக செலவாகும், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும், மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தத் தீங்கும் ஏற்படாது.
இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஏசி குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும், மின்சாரம் சேமிக்கப் படுகிறது. மூளையின் இரத்த அழுத்தமும் குறையும் மற்றும் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.
எப்படி ??
26+ டிகிரியில் ஏசியை இயக்குவதன் மூலம் ஒரு இரவுக்கு சுமார் 5 யூனிட்கள் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், சுமார் 10 லட்சம் வீடுகளும் உங்களைப் போலவே செய்கின்றனர் என்றால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கிறோம்.
பிராந்திய அளவில் இந்த சேமிப்பு ஒரு நாளைக்கு கோடி யூனிட்களாக இருக்கும்.
இதனால் புவி சூடாதல். குறையும். இதனால் இயற்க்கை பாதுகாக்கப்படும்.
தயவு செய்து மேற்கூறியவற்றைக் கவனியுங்கள், உங்கள் ஏசியை 26 டிகிரிக்குக் கீழே இயக்க வேண்டாம். உங்கள் உடலையும், சுற்று சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பொது நலனுக்காக அனுப்பப்பட்டது.

தமிழர்களின் பெருமையான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு



 

 தமிழர்களின்  பெருமையான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுவை உலகிற்கு காட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஒரு டி ஷர்ட் மற்றும்  உபயோக பொருட்கள் வடிவமைத்து இருக்கிறார்கள் . உங்களுக்கு தேவையானதை வாங்கி மகிழ்வீர் .


இதில்  போடப்பட்டுள்ள கருத்துக்கள் 

A Traditional Sport that 

Brave tamizhans

catches the

hump

of

Dare Bull

Note blood sport but brothers sport


Click here to see the products:

https://www.redbubble.com/i/art-print/Jallikattu-traditional-Tamil-Sport-by-arstudioz/64712178.1G4ZT



மூலிகை செடிகள்


மூலிகை செடிகள் கிடைக்குமிடம்:
9942280902
சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி (கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்),மற்றும் பலவிதமான மூலிகைகள்.
ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்
சித்தரத்தை – நெஞ்சுவலி போக்கும்
1.சர்க்கரைக்கொல்லி (சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது.
2.
இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்
தொடர்புக்கு 9942280902

இலைச்சி ஒரு புது உயிரினம்


பார்பதற்கு இலை போன்று இருக்கும் இந்த உயிரினம் . அதிகமாக காணப்படும் இடம் தென் ஆசியாவிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் .

ஆங்கிலத்தில் இதன் பெயர் leaf insects or walking leaves தமிழ் பெயர்  இலைச்சி என்று காணபடுகிறது .
இலை + பூச்சி = இலைச்சி



Phylliidae

From Wikipedia, the free encyclopedia
Leaf insects
Temporal range: Eocene - Recent
LeafInsect.jpg
Phyllium from the Western Ghats
Scientific classification
Kingdom:Animalia
Phylum:Arthropoda
Class:Insecta
Order:Phasmatodea
Superfamily:Phyllioidea
Family:Phylliidae
Redtenbacher, 1906
Genera
The family Phylliidae (often misspelled Phyllidae) contains the extant true leaf insects or walking leaves, which include some of the most remarkably camouflaged leaf mimics in the entire animal kingdom. They occur from South Asia through Southeast Asia to Australia. At present, there is no consensus as to the preferred classification of this group; some sources treat Phylliidae as a much larger taxon, containing the members of what are presently considered to be several different families. 

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)


ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.‪#‎உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
‪#‎எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ‪#‎கடந்த‬60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.
நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.‪#‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
நன்றி : சரவணக்குமார் வே

இயற்கை நீச்சல்குளங்கள்

ஒரு இயற்கை நீச்சல் குளம் அல்லது குளம் ஒரு தூய சூழலியல் அமைப்பாகும். தண்ணீர் ரசாயனங்கள் இருந்து பாதுகாக்கப்பட்டு மற்றும் தாவரங்கள் நீர் மறுசுழற்சிக்கு பயன்படுத்தபடுகின்றன .உயிரியல் வடிகட்டிகள் ( biological filters)அல்லது இயற்கை தாவரங்கள் மூலம் நீர்   சுத்தகரிக்கபடுகிறது . இதுவே இயற்க்கை நிச்சல் குளம் ஏனெனில் இந்த  அமைப்பு  உயிரியலுக்கு நிகரானது (biological equivalentsஇந்த  இயற்கை உலகில்.
இயற்கை குளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்:
  • நீச்சல் பகுதி / மண்டலம் (swimming pool)ஒரு வழக்கமான நீச்சல் குளம் அல்லது குளம் போல இருக்கும் அமைப்பாகும் 
  • மீளுருவாக்கம் பகுதி/  மண்டலம் (regeneration area) என்பது வரிசையாக குளம் வழிந்து  ஒரு குறிப்பிட்ட வடிகட்டும் மூலக்கூறு மற்றும் தாவரங்கள் நிரப்பப்பட்ட ஒரு பகுதி.தாவரங்கள்  நீரை  சுத்தபடுதுவதொடு உங்கள் குளத்துக்கும் அழகு கூட்டும் . இந்த உயிரியல் செயல்முறைகள் இந்த பகுதியில்  உள்ள நீரை சுத்த படுத்துகின்றன .
Wikipedia
pool-filtration-diagram
குளம் வடிகட்டுதல் அமைப்பு
நிச்சலடிபது அல்லது குதிப்பது போன்றவைகளால் நீர் மீளுருவாக்கம் பகுதியில் இருந்து நிச்சலடிக்கும் பகுதிக்கு தண்ணிரை கொண்டுசெல்கிறது .இயற்கை தாவரங்கள்  அசுத்தங்கள் மற்றும் அதன் சத்துக்களை  பாசிகளை வடிகட்டி  தடுக்கிறது. இயற்கை கற்கள் தண்ணிரை இயற்கை முறையில் வடிகட்டுகிறது .இந்த இயற்கை நிச்சல் குளம் அசுத்தங்கள் தங்காது எனவே சாக்கடைக்கு இணைக்க தேவையில்லை மற்றும் எரிசக்தி மற்றும் இயந்திர செலவினங்களைக் குறைகிறது.
இந்த இயற்கை குளம் மேலும் ஒரு சுற்று சூழல் அமைப்பு கொண்டது  தவளைகள், நத்தைகள் மற்றும் பிற இயற்கையாக வாழும் உயிரினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ வழிவகை செய்கிறது .இது ஒரு நல்ல அமைப்பு .
எனவே ஒரு இயற்கை குளத்தில் நீங்கள் அரிப்பு தோல், சிவந்த கண்கள், ஒவ்வாமை அல்லது குளோரின் நிரப்பப்பட்ட நீரின் முலம் வரும்  காரணங்கள் பூர்த்தி போன்ற  சிக்கல்கள் இல்லை.நீங்கள் ஒரு வெப்ப குழாய்கள் மூலம் உங்கள் குளத்தை  இணைக்க முடியும் அல்லது சூரிய ஆற்றல் சக்தியின் முலம் நீரை வெப்பமுட்ட மற்றும் விளக்குகள் போன்றவட்ட்ரை இயக்க முடியும் .இதனால் குழாய்கள், விளக்குகள் போன்றவற்றை  மின் பயன்பாட்டில் இருந்து சேமிக்கலாம் .

ஒரு இயற்கை நீச்சல் குளம் திட்டத்தை செயலாக்கம் செய்யும்போது  பின்வருபவற்றை கருத்தில் கொள்க :
– 2 மீ குறைந்தபட்ச ஆழம்
– சரியான சுத்திகரிப்பு regeneration- மற்றும் நீச்சல் பகுதிகள்  சமமாக இருக்க வேண்டும்
– சுத்திகரிப்பு regeneration- மற்றும் நீச்சல் பகுதிகள் தனித்தனியே   இருக்கவேண்டும் 
–  குளதுக்குகேன்று பொது தர விதிகள் இல்லை .ஊருக்கு மற்றும் காலநிலை ஏற்றாற்போல் மாறுபடும் 
– நீங்கள் உடனடியாக நீந்த முடியும் ஆனாலும் முழு உயிரியல் சமநிலை  அடைய இரண்டு அல்லது முன்று வருடங்கள் ஆகும்.
ஒரு இயற்கை குளம் ஒரு கிளாசிக்கல் இரசாயன குளத்தை  விட குறைந்த பராமரிப்பு வேண்டும் என்றாலும், ஒரு பருவகால பராமரிப்பு (seasonal care) இன்னும் தேவை: அவைகள் 
° வசந்த காலம் பராமரிப்பு(spring): தாவரங்கள் சீரமைக்கப்பட மற்றும் அதன்  அதிக வளர்ச்சியை  வெட்டி தவிர்க்க வேண்டும்  , ஒரு சாதாரண தோட்டத்தில் போன்ற அனைத்து பகுதிகளில் இருந்து வெளி அசுத்தங்கள் குறைக்க வேண்டும்.
° கோடை கால பாதுகாப்பு: சூடான நாட்கள் நீர் ஆவியாகி இருக்கலாம் மற்றும் குளத்தை பாதுகாக்க கூடுதல் தண்ணீர் வேண்டும்
° இலையுதிர் கால பராமரிப்புஇறந்த இலைகள் நீக்க மற்றும் பாசிகள் வளர்ச்சியை தடுக்க வேண்டும்
° குளிர்கால பராமரிப்புநம்மூரில் நீர் உறைக்கும் குளிர் ஆக வாய்ப்பு இல்லை அதலால் பிரச்னை இல்லை .

சமயல்பொருட்கள் ஆங்கில வார்த்தைகள்


மளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.
ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
ஜாதிபத்திரி – Mace – மெக்
இஞ்சி – Ginger – ஜின்ஜர்
சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
பூண்டு – Garlic – கார்லிக்
வெங்காயம் – Onion – ஆனியன்
புளி – Tamarind – டாமரிண்ட்
மிளகாய் – Chillies – சில்லிஸ்
மிளகு – Pepper – பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
பச்சை மிளகாய் – Green chillies
குடை மிளகாய் – Capsicum
கல் உப்பு – Salt – ஸால்ட்
தூள் உப்பு – Table salt
வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
கற்கண்டு – Sugar Candy
ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
கிஸ்மிஸ் – Dry Grapes
லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
கசகசா – Poppy – பாப்பி
உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு – Moong Dal
கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
உழுத்தம் பருப்பு – Urid Dhal
துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு – Millet – மில்லட்
கேழ்வரகு – Ragi – ராகி
கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
கோதுமை – Wheat – வீட்
கோதுமை ரவை – Cracked Wheat
சோளம் – Corn
சோளப்பொறி – Popcorn
எள்ளு – Sesame seeds / Gingelly seeds
நெல் – Paddy – பாடி
அரிசி – Rice – ரய்ஸ்
அவல் – Rice flakes
பச்சை அரிசி – Raw Rice
புளுங்கல் அரிசி – Par boiled rice
கடலை மா – Gram Flour
மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
வாற்கோதுமை – Barley – பார்லி
பச்சை பட்டாணி – Green peas
சேமியா – Vermicelli
சவ்வரிசி – Sago
ரவை – Semolina
கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
கடுகு – Mustard – முஸ்டார்ட்
சீரகம் – Cumin – குமின்
வெந்தயம் – Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
மஞ்சள் – Turmeric – டர்மரிக்
ஓமம் – Ajwain / Ajowan
தனியா – Coriander – கோரியண்டர்
கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை – Curry Leaves
கஸ்தூரி – Musk – மஸ்க்
குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்
பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்
கற்பூரம் – Camphor – கேம்ஃபர்
மருதாணி – Henna – ஹென்னா
துளசி – Tulsi
எலுமிச்சை துளசி – Basil
எண்ணெய் – Oil – ஆயில்
கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்
பாமாயில் – Palm Oil
ஆலிவ் ஆயில் – Olive Oil
பால் – Milk – மில்க்
பால்கட்டி – Cheese – ச்சீஸ்
நெய் – Ghee – கீ
வெண்ணெய் – Butter – பட்டர்
தயிர் – Curd/Yoghurt – க்கார்ட்
மோர் – Butter Milk – பட்டர் மில்க்
கீரை – Spinach – ஸ்பீனச்
அவரை – Beans – பீன்ஸ்
கர்பூரவள்ளி – Oregano
நார்த்தங்காய் – Citron – சிட்ரான்
திருநீர்பச்சை – Ocimum-basilicum
சீத்தாப்பழம் – Custard-apple
மாதுளை – Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் – Pumpkin
கருங்காலி மரம் – Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் – Bermuda Grass
வல்லாரை கீரை – Pennywort (Centella asiatica)
புதினா இலை – Mint leaves
வெற்றிலை – Betel leaves
நொச்சி இலை – Vitexnegundo (Chaste Tree)
அத்தி – Fig
கீழாநெல்லி – Phyllanthus nururi
தாழை மரம் – Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை – Purple-fruited pea eggplant
துத்திக்கீரை – Abutilon indicum
பிரமத்தண்டு – Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் – Coccinia grandis
முடக்கத்தான் கீரை – Cardiospermum halicacabum
குப்பைமேனி – Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி – Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை – Aloe Vera
நாவல் பழம் – Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி – Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி – Heliotropium
நிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica
நெல்லிக்காய் – Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) – Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் – Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia
அகத்திக்கீரை – Sesbania grandiflora
செண்பகப் பூ – Sonchafa (champa)
சுண்டைக்காய் – Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி – Hibiscus(Shoe Flower)
கரும்பு – Sugar cane
நீர்முள்ளி – Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ – Star Anise
பூவரசு – Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை – Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry
கத்தரிக்காய் – Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் – Guava
மரவள்ளிக் கிழங்கு – Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு – Yam
விளாம் பழம் – Wood apple
முள்ளங்கி – Radish / parsnip
புடலங்காய் – Snake gourd
பாகற்காய் – Bitter gourd
வெண்டைக்காய் – Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை – Peanut
வாழைக்காய் – Ash Plantain
வாழைப்பழம் – Banana
ஊறுகாய் – Pickle
உருளைக் கிழங்கு – Potato
தேங்காய் – Coconut
இளந்தேங்காய் – Tender Coconut
இளநீர் – Tender Coconut water
பதநீர்/பயினி – Neera /Palmyra juice
கள்ளு – Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு – Lime
ஆப்பச் சோடா – Baking Soda
தீப்பெட்டி – Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick
http://vijaytamil.net/

ஃப்ரீலான்ஸ்(சுயபணியாளர் ) தொழில்கள்!

வளமான வருமானம் தரும் ஃப்ரீலான்ஸ் தொழில்கள்!செ.கார்த்திகேயன்
இன்றைய நிலையில் பெரும்பாலான இல்லத்தரசிகள் வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் ஃப்ரீலான்ஸ் வேலைகளைச் செய்து, கைநிறையச் சம்பாதிக்கிறார்கள். ஃப்ரீலான்ஸாக வேலை செய்வதில் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? அரக்கப் பரக்க ஆபீஸ் போய், நாட்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த நேரத்தில், உங்களுக்குப் பிடித்த மாதிரி வேலை செய்து கைநிறைய சம்பாதிக்க வழிசெய்து தருபவைதான் இந்த ஃப்ரீலான்ஸ் வேலைகள். வீட்டோடு அதிக நேரம் செலவழிக்க விரும்பு கிறவர்களுக்கு இந்தவகை வேலைகள் மிக ஏற்றவை! அந்த வகையில் நல்ல வருமானம் தரும் ஐந்து ஃப்ரீலான்ஸ் வேலைகளை இந்த இதழில் தருகிறோம்.





வீட்டு மனை வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை


நகரமயமாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புள்ள பகுதிகளை தேடி இடம் பெயர்ந்து வருவோருக்கு சொந்த வீட்டு கனவை  ஒட்டு மொத்தமாக நகரங்கள் பூர்த்தி செய்ய முடியாது. தற்போது கிராமப்புறங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக  மாற்றப்படுகின்றன. ஆனால், எந்த வீட்டு மனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு  விதிமுறைகளுக்குட்பட்டும், அனுமதி பெற்றும் கட்டப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொண்டால் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது.

பஞ்சாயத்தில் போடப்படும் எந்த ஒரு லே அவுட்டும் நகர்ப்புற, ஊரமைப்பு துறைக்கு (டி.டி.சி.பி) தெரிவிக்கப்பட்டு அதன் அனுமதி பெற்றிருக்க  வேண்டும். ஊரமைப்பு துறையின் முறையான அனுமதி பெறும் லே அவுட்களில் சாலைகளின் அகலம் குறைந்தபட்சம் 23 அடி, மனைகளின் அளவு  1500 அடி (30 அடிக்கு 50 அடி) இருக்க வேண்டும். மறுவிற்பனை என்கிற போது 1200 (30 அடிக்கு 40 அடி) சதுர அடிக்கு குறையாமல் இருக்க  வேண்டும்.

மனைப் பிரிவில் சாலையின் நீளம் 120 அடியாக இருந்தால் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடியாக இருக்க வேண்டும். சாலையின் நீளம்  120 அடி முதல் 200 அடிக்குள் இருந்தால் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 30 அடியாக இருக்க வேண்டும். சாலையின்அகலம் 200 முதல் 500  அடியாக இருக்கும்பட்சத்தில் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 40 அடியாக இருக்க வேண்டும் என்பது ஊரமைப்பு துறையின் விதிமுறை.

பஞ்சாயத்து பகுதியில் போடப்படும் மனைப் பிரிவுகளுக்கு இறுதி அனுமதி அளிக்கும் அதிகாரம் பஞ்சாயத்து தலைவருக்குதான் இருக்கிறது. ஆனால்,  ஊரமைப்பு துறையின் அனுமதியோடு போடப்பட்ட மனைப் பிரிவு என்றால் தான் அது செல்லுபடியாகும். மனைப்பிரிவில் சாலைகள், பூங்கா,  விளையாட்டு திடல், பள்ளிக் கூடம், சமுதாயக் கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். அப்போதுதான்  பஞ்சாயத்தில் போடப்படும் லே அவுட் என்றாலும் ஊரமைப்பு துறை அப்ரூவல் அளிக்கிறது.

பஞ்சாயத்து அப்ரூவல் லே அவுட்டில் சாலைகள், பூங்கா, விளையாட்டு திடல் போன்றவற்றை தானப் பத்திரமாக லே அவுட் போடும் புரமோட்டர்  தொடர்புடைய பஞ்சாயத்துக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். லே அவுட்டில் பள்ளிக் கூடம், சமுதாயக் கூடம், கடைகள் போன்றவற்றை அது  தேவைப்படுவர்களுக்கு விற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இவை என்ன தேவைக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு தான் பயன்படுத்த  வேண்டும்.

கடைகளுக்கு உரிய இடங்கள், அந்த இடத்தில் போதிய அளவுக்கு கடைகள் வந்து விட்டால் வீட்டு மனையாக மாற்றிக் கொள்ள  அனுமதிக்கப்படுகிறது. சாலையின் அகலம் குறைவு மற்றும் மனை அளவு குறைவு போன்ற காரணங்களால் கட்ட அனுமதி மறுக்கப்படுவது அதிக  எண்ணிக்கையில் இருக்கிறது. மனை அளவு 300, 400 சதுர அடி மற்றும் சாலையின் அகலம் 10 அடி அல்லது 12 அடி என்பது போல் இருந்தால்  வீடு கட்ட அனுமதி கிடைப்பது கடினம்.

இப்போது பஞ்சாயத்தாக இருக்கும் பகுதிகள், சில ஆண்டுகளில் நகராட்சி பகுதியாக மாறக்கூடும். அப்போது அதற்கான விதிமுறை இதற்கும்  அமல்படுத்தப்படும். அப்போது சாலையின் அகலம் குறைவு மற்றும் மனை அளவு குறைவு என்றால் கட்டடம் கட்ட நிச்சயம் அனுமதி கிடைக்காது.  குடியிருப்பு அல்லது முதலீடு நோக்கம் எதுவாக இருந்தாலும் சாலைகளின் குறைந்தபட்ச அகலம் 23 அடி, மனையின் குறைந்தபட்ச அளவு 1,200  சதுர அடி அல்லது 1,500 சதுர அடி வாங்கினால், கட்ட அனுமதி பிரச்னை வர வாய்ப்பில்லை.

கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?


உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?
காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?



இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு
நண்பர்களுடன் பகிரவும்.
நன்றி.
1. இன்ஷூரன்ஸ் பாலிசி....யாரை அணுகுவது..?
---------------------------------------------------------------------------
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள்.
அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;
அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..?
-------------------------------------------------------------------------------------
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?
----------------------------------------------------------
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும்.
அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?
-----------------------------------------------------------------------
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு! யாரை அணுகுவது..?
---------------------------------------------------
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்.....! யாரை அணுகுவது?
-----------------------------------------------------------------------------
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை;
ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும்.
இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
-----------------------------------------------------------
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.
இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
--------------------------------------------------------
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா!
--------------------------
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்.
அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
-----------------------------------------------------------
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.
20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
11. கிரெடிட் கார்டு!
---------------------------
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Courtesy :விகடன்